Friday, October 15, 2010

நினைவுகள்

கலைந்து போன நட்பினை
மீண்டும் நினைத்து பார்க்கும் போது
பழகிய பசுமையான நினைவுகள்
கண்ணீருடன் சிரிக்கும்..
உயிரான காதல்
உறவறுந்து போனதை
மீண்டும் நினைத்து பார்க்கும் போது
நினைவுகள் இரத்தமாய் ஞாபகம் வரும்...
castro...

Sunday, October 3, 2010

இருக்கணும்

பார்ப்பது எல்லாம் அழகாக இருப்பது போல் தோன்றினால்,
மனதுக்குள்........
ஒன்று கவிதை இருக்கணும்,
இல்லாவிட்டால் காதல் இருக்கணும்
கஸ்ரோ

Monday, July 19, 2010

ஞாபகம் வருகுதா..?

மல்லிகை பூவைக் கண்டால்....
முகர்ந்து பார்க்க ஆசைபடுவாய் .
கோயில் எதனையும் வழியில் கண்டால்
இறைவனுக்கென்று அர்ப்பணிப்பாய்
அருகில் நிற்கும் என்னை
அம்போ என்று அலைய விடுவாய்
ஞாபகம் வருகுதா..?


கல்லூரி செல்லும் வேலை ....
உனக்கும் எனக்கும் பாதைகளோ வேறு வேறு
என்தரிசனம் தேடி நீயும்
உன் தரிசனம் நாடி நானும்
காவல் இருந்து கண்களால்
கதை பல பேசி களைந்து செல்வோம்
ஞாபகம் வருகுதா..?


பருவம் அடைந்த அன்று தொடக்கம் ....
படலை தாண்டி உன்னை காணவில்லை,
பாவி நான் காரணம் புரியாமல்
உன் வீட்டு படலையடியால்
பல்லாயிரம் தரம் நடந்தேன்
ஞாபகம் வருகுதா..?


கண் கொண்டு எனை பார்க்க மறுத்தாய்.
அன்புதனை உள்ளடக்கி
வேசம் போட்டுத் திரிந்தாய்
நீ என்னை கண்டு நாணம் கொண்டாயோ
எனக்கு தெரியாது
உன்னை கண்டு வெட்கம் நான் அடைந்தேன்
ஞாபகம் வருகுதா..?


இதய காதலை கவிதையாய் எழுதி...
உன் கையில் தந்தேன்
வெட்க சிரிப்பு ஒன்றை மட்டுமே
பதிலாய் தந்து இறுதிவரை
என்னோடு கூட வருவாயா
என்று கேட்டாயே
ஞாபகம் வருகுதா..?


காலம் செய்த கோலம்
வேம்படி விட்டு நீ விலகி செல்ல
வேம்படி மகளிர் கூட
கடைசி வரை என் மனதில்
பதியவில்லையே நீ அறிவாயா....?


எதை நீ இன்று அறிவாய் ?
எதை நீ நினைவில் வைத்து இருப்பாய் ?
எவருக்கு தெரியும்......

என் வேதனை......
என் வேதனை......
என் வேதனை......


அன்புடன்
கஸ்ரோ

லொள்ளு பண்றாங்கப்பா.......... லொள்ளு....

நான் முந்தி வேம்படி பிள்ளை love ஒன்றை பண்ணினானாம்
அந்த காதல் தோல்வியில முடிஞ்சு போச்சாம்
அதனால் தான் என் கவிதைகள்(????) எல்லாம்
காதல் சோக கவிதைகளாக இருக்காம்.....
எல்லா கவிதையும் அந்த பிள்ளைய
பற்றிய எண்ணங்களாகவே இருக்காம்
என் எண்ணம் எல்லாம் பியூச்சர் மேல இல்லையாம்
பிரிந்து போன அந்த பிள்ளை மேலேயே இருக்காம்,
என்று இந்த ஊர் சொல்லுது.....
காதலில் தோற்றவன் தான்
காதல் சோக கவிதை எழுதணும்
என்று இருக்கா?
மற்றவங்க எழுதின தப்பு என்று
பெரியவங்க யாரும் சொன்னாங்களா....
அப்படித்தானே என்று
சும்மா comment பண்ணினா
கூட நம்பி விடுறாங்கப்பா.....
எத்தனை mail ,,
எத்தனை comments ....
எத்தனை லொள்ளு ........ லொள்ளு....
ரொம்பதான் லொள்ளு பண்றாங்கப்பா.......... லொள்ளு....

castro

வலிக்காத நெஞ்சமதில் உன்னை மறக்காத நினைவுகளுடன்

மலர்ந்த காதல் மரணம் அடையுமா.?
இருவர் பிரிவு என்பது காதலுக்கு கல்லறை அமைக்குமா....?
காதலர்களுக்கு மரணம் சகஜமே...
காதலுக்கு மரணம் சாத்தியமாகுமா..??



காதல் இனிமையானது காதல் தேவதையே
இனிமையாக தானே இருந்தாய் நேற்று வரை...
வரமாக இருந்தது உன் நினைவு....-இன்று
துயரமாகி பாரமாய் என்னுள் உன் நினைவு.....


தனிமையாகி போன காதலால்
என் கவிதையும் தனிமையாகி போனதே....
அன்பே உன்னால் முடமாக்கபட்டு...
நொந்து போன என் காதலும்....
சந்தோசம் பாடையேறி போனது போன்ற
என் பேனாவின் வார்த்தைகளும்
என் மரண படுக்கையில் மகிழ்ச்சியுடன்...
நிறைவேறுமா......?


வாழ்க்கை முழுவதும் தனியாக
வாழ்ந்திட முடிவதும் இல்லை.....
உன் முதற்காதல் நினைவுகள் இன்றி
நான் வாழ போவதுமில்லை....
மல்லிகை செடியொன்று
என் நந்தவனம் வந்தாலும்...
மலர் பல தந்து மணம் வீசி நின்றாலும்....
தனிமை என்கின்ற என் தனி பொழுதுகளில்
நெருடுகின்ற முள்ளாய் நீயிருப்பாய்
என்பது நிட்சயமே.....


வலிக்காத நெஞ்சமதில் உன்னை மறக்காத நினைவுகளுடன்
இவன் கஸ்ரோ

Wednesday, June 30, 2010

ஏனெனில் நான் இன்னமும் உன்னை நேசிக்கறேன்

விதி செய்த விளையாட்டே
நீ எனக்கு கிடைக்கவில்லை -என்று
நினைத்து அமைதியானேன் அன்று....

இது விதியின் விளையாட்டு அல்ல
எனக்கு நீ அளித்த பரிசு -என்று
தெரிந்து கொண்ட போது
அமைதியாய் உன்னை நினைத்து
உறங்கி கொண்டிருந்த என் இதயம்
சுக்கு நூறாகி போனது.....

காதலில் தோற்று விட்டேன்
என்ற கவலையை விட
தோற்கடிக்கபட்டேன் என்பதுதான்
இன்னமும் வலிக்கிறது

ஏமாற்றி விட்டாய் நீ என்று
இது வரை கவலை கொண்டதில்லை
ஏமாந்து போனேனோ என்று
இன்று சிந்திக்க வைத்து விட்டாய்

பிரச்சினை என்று சொன்னாய்
பிரிந்து விடுவோம் என்றும்
தொலைபேசியில் அழைத்து
அன்புடன் சொன்னாய்
உன் நலமே என்றும் நான்
நாடி வந்த படியால்
நகர்ந்து சென்றேன் உன் தடம் மாறி....

உன் புலம்பெயர்
சந்தோஷ வாழ்விற்கு
பிரச்சினை நானேதான் என்று
இன்றுதானே புரிந்து கொண்டேன்..என் அன்பே....

கோபம் வரவில்லை கண்ணே,
கோலம் ஏன் போட்டாய் நீயும்??
விளக்கி சொன்னால் விலத்தி விடுவேன் தானே
ஒன்பது வருட காதலில்
என்னை புரிந்து கொண்டது இவ்வளவுதானா??


அதனால் கூறுகிறேன்
இனியாவது உண்மையாய்
உன் கணவனிடமும்
பிள்ளைகளிடமும்.....

ஏனெனில்
உன்னை எவரும் தப்பாக
பேசிவிடக்கூடாது

ஏனெனில் நான் இன்னமும்
உன்னை நேசிக்கறேன்

மாற்றான் தோட்டத்து
மல்லிகையாய் உள்ளாய்
என்ற போதும் உன்னை மறக்க
ஏன் மனம் தயாராக இல்லையே.....


கஸ்ரோ

Monday, June 28, 2010

உனக்கு சொல்வேன் நன்றி பல....

கல்லூரி நேரங்களில் கூட
கற்பதை பற்றி கண நேரம் கூட
கவலை கொண்டதில்லை
ஏனெனில் என் மனதில்
அப்போதும் உன் நினைவுகளே
நிரம்பி இருந்தன.....

ஆனால்
பாடசாலை பொழுதுகள்
தோல்விகளுடன் கடந்து செல்ல
வாழ்க்கை பயம் வந்தது....


வேலை தேடும் வேலையை விடுத்து...
காதல் செய்யும் நேரங்களே அதிகமாக
வெட்டியாய் கடந்தது சில பொழுதுகள்


இதயத்தில் வாழும்
உன்னையே நினைத்து
பொழுதுகளை நகர்த்தியதால்
உயரங்கள் என்பன
உயர்ந்து போயின.....

ஆனால்,
பணத்தால் உயர்ந்து
பாஸ் போர்ட்டிலும் மாறுபட்டு
கனவானொருவனை கைபிடிக்கும்
எண்ணத்துடன் அழைத்த போதுதான்
காலமெல்லாம் உன்னோடு
வாழும் கனவுகள் கலங்கிய நிலையில்
கண் விழித்து பார்க்கையில்....

காலம் என்னை
கைகழுவி
கடந்து சென்றிருந்தது.

ஆயினும்
பயனின்றி கடந்து சென்ற
காலத்தை கைப்பற்ற
நண்பனின் ஆசியுடனும்
என்னில் உள்ள நம்பிக்கையுடனும்
உறுதியாக ஊர் நாடி
நகர்ந்து கொண்டிருக்கின்றேன்...

என்ன்றாவது ஒரு நாள்
நாம் சந்திப்போம் - அப்போது
உனக்கு சொல்வேன் நன்றி பல....
என் பலத்தை
என் மனவுறுதியை
எனக்கு நீ
புரிய வைத்தமைக்காக......


அன்புடன்
கஸ்ரோ

Thursday, June 24, 2010

தோற்றேன்.. தோற்றேன்.. தோற்றேன்.....

கல்லூரியில்
பாட கணக்கை
தவறாக போட்டு
கல்வியிடம்
தோற்றேன்

நிதி கணக்கை
தவறாக போட்டு
பணக்கணக்கில்
தோற்றேன்.

அன்பு கணக்கினை
தவறாக போட்டு
உறவுகளிடம்
அவமானத்துடன்
தோற்றேன்

நட்பு கணக்கினை
தவறாக போட்டு
சில நட்புகளிடம்
தோற்றேன்.

காதலிலும்

தவறாக
கணக்கினை போட்டு
இனிய வாழ்க்கையிடமும்
தோற்றேன்.. தோற்றேன்..
தோற்றேன்.....

கஸ்ரோ
தினம் தினம்
பல பேருடன்
பல விடயங்களை பற்றி
கதைக்கிறேன்
உன் வார்த்தைகளுக்கு
மட்டும்
அர்த்தம் தேடுவது
ஏன்???



விரும்புகிறேன் என்றவளின்
காதலை ஏற்கத் மறுத்த
இதயம்
காதலை சொல்லத் தயங்கிய
உனை நினைந்து
உருகியது எதற்காக??

காதலித்த பொழுதுகளை
உன் பேச்சுகளை மட்டுமே
செவிமடுத்து
மௌனமாக இருந்த
என் உதடுகள்
உன் பிரிவில்
கதறியழ துடிக்குதே
ஏன்???

பிரிவென்ற சொல்லுக்கு
பன்முறை செவிசாய்த்தருந்தும்
உன் பிரிவில் மட்டும்
விழிகளுக்குள் வியர்வை
ஏன்???

கஸ்ரோ

Thursday, June 17, 2010

பிரியாத உறவுகளில் பிரியம் வை.......

மலரை நேசிக்கும் நட்பே - அது
உதிர்ந்து போனதிற்காக வருந்தாதே,
மீண்டும் ஒரு மலர் பூக்கும்........

நிலவை நேசிக்கும் நட்பே - அது
மறைந்து போனதிற்காக வருந்தாதே
வளர்பிறை உண்டு என்பதை
உணர்ந்து கொள்............

உறவினை நேசிக்கும் நட்பே - அது
பிரிந்தால் வலி என்பதால்
பிரியாத உறவுகளில் பிரியம் வை.......

கஸ்ரோ

Monday, May 31, 2010

சந்தர்ப்பம் ஏதும் வருமா....? காத்திருக்கிறேன் நண்பர்களே.....?

பசுமரத்தாணி போல மத்திய தாயின் நினைவுகள். –
எவராலும் மறக்க முடியாத அந்த கடந்து போன நிஜங்கள் .
ஆளுக்கொரு பெயர் புதிதாக சூட்டி ஆடிப்பாடிய சுகங்கள் .
கல்லூரியில் எமை ஆட்டி வைக்கும் ஆசிரியர்களையும்
ஆட்டி வைப்போம் என்று ஆரவாரித்து கிளம்பிய
சின்னபிள்ளை விளையாட்டுகள்...

ஜெயசீலன், ஜெயக்குமார் ஆசிரியர்களை கலாய்த்த பொழுதுகள்.
கவிதை கட்டுரை போட்டிகள் வந்தால் பிரேம்குமார் மிஸ் இற்கு
பயந்து ஓடி ஒலித்த நாட்கள். .
ஏர்போர்ட் வழியாக (பாத்ரூம் பக்கம் ) களவாக வீடுசென்ற நாட்கள்,
ரிப்போட்டில் போட்ட நண்பனின் கள்ள கையெழுத்து,
மேசையில் எவருக்கும் தெரியாமல் நண்பியின் பெயரை எழுதி ரசித்த நிமிடங்கள்........
அதற்காய் நண்பர்களிடம் பட்ட நக்கல்கள் .
அத்தனையும் சித்தப்பிரமையாய் தித்தித்ததெப்படி?...
விடைகான முடியாத கல்லுரி நாட்கள் அது.
வருசத்தில் வரும் பிக் மேட்ச்...
ஸ்கௌட், அந்த சைக்கிள் பாக், தம்பர் மண்டபம் ,
மதில் மேலிருந்து பார்க்கும் கிரிக்கட் மெச்,
வேம்படியினை எட்டி பார்க்க உதவி பண்ணும் லோ ஸ்கூல்,
பாதி மீதியாய்ப் பகிர்ந்துண்ணும்
மணி அன்னையின் உப்புத்தூள் மாங்காய்
கற்பனைக்குள் அடங்காத அத்தனை சொர்க்கம்.
பரீட்சைக்காலத்தில் மட்டும் நன்றாக நித்திரை வரும் இரவுகள்,
அந்த சின்ன வயதில் வந்த காதல்,
அதற்காக வேம்படி வீதியில் நூறு முறை சைக்கிள் ஓடிய காலைபொளுதுகள்,,
ஒரு ரூபாய் இற்கு கூட கணக்குப் பார்த்த காலங்கள்.
அத்தனை கெட்டிக்காரர்களும் வித்தியாசமாய் நானும்
ஒன்றாய் இருந்த வகுப்பறைகள்.
எல்லாவற்றையும் மாற்றி அமைத்த
மாணவர் தலைவர் என்கின்ற பதவி,,,

- இப்போ..... திக்கொன்று திசையொன்றாய் எட்டமுடியா தூரங்களில் சந்திக்க நினைத்தாலும் முடியாத தொலைவில் நானும் நீங்களும்,, எப்போ....
எங்கே....
சந்தர்ப்பம் ஏதும் வருமா....?
காத்திருக்கிறேன் நண்பர்களே.....?

castro

Tuesday, May 25, 2010

உறுதி..............

படிப்பின் தேடுதலுக்காக
நகர்ந்த நாட்களில்
நீ என்னை
இம்சைபடுத்தினாய்

பரீட்சை முடிவொன்று
வருவதற்கு முன்னரே
எனை பிரிந்து
பிரிவுக்குள்ளாகினாய்..

வாழ்வின் தேடுதலுக்காக
நகர்ந்த நாட்களில்
நீ எனக்கு முடிவெழுதி
கல்லறை தந்தாய்....

கடமைக்காக
காத்திருக்கும் நாட்களில்
கனவினிலும் அடிக்கடி வந்து
என் தனிமையினை தவிப்பூட்டுகிறாய்.............

ஏனடி இந்த கொலைவெறி...

என்னைத் தோற்கடித்ததாய்
உனக்குள்ளே சந்தோஷப்படும்
தருணங்களில்
நீ என்னை நினைப்பதால்,
நினைக்கிறேன்
தோற்காத
என் காதலை.....

ஆனால்..........................

ஒன்று மட்டும் நிட்சயம் பெண்ணே
நீ புரியும் ஒவ்வொரு செயல்களும்
என்னை உனக்கு ஒவ்வொரு கணமும்
ஞாபகபடுத்தி கொண்டே இருக்கும் என்று...........

மரணத்திலும் இணைய
முடியாமல் முற்றுபுள்ளி
வைத்தாகி விட்ட
நம் காதல்,,,
எம் மரணணங்கள் வரைக்கும்
என் மனத்தில் பசுமையாய்
இருக்கும் என்பது உறுதி..............

Wednesday, May 12, 2010

வலிகள்=வரிகள்

வலிகள் எவருக்கும் பொதுவானவை
வரிகள் கூட வலிகள் ஆயின உன்னால் ,,
அதனால் எனக்கு இன்று
வலிகள் எல்லாம் வரிகள் ஆகுகின்றன.... கஸ்ரோ

Thursday, May 6, 2010

Monday, May 3, 2010

புரிந்துணர்வு என்பது உன்னிடம் தவறாக போனதால் பிரிவு என்பது ஆரம்பமாகி விட்டதா...? தற்போதைய சூழ்நிலையில் உன் பிரிவோ வேறு எவர் பிரிவுமோ என்னை கவலைப்படுத்தப் போவதில்லை என்றாலும், மறக்க தெரிந்த உன் மனதை எண்ணி என் மனமும் இதயமும் வருத்தப்படுவதை என்னால் தடுக்க முடியவில்லையே...... பழகியவை உனக்கு பழசாகி போனாலும், எனக்கு கடந்த ஒவ்வொரு நிமிடமும் என் உயிருடன் கலந்தே இருக்கின்றன..... கஸ்ரோ

Tuesday, April 27, 2010

நண்பர்கள்

நான் நலமாக இருந்தேன்
நன்றாக வாழ்ந்தேன்
என்னை சுற்றி நண்பர்கள்
ஆழ் கடல் போல் இருந்தார்கள்
கடல் தாண்டி சென்றபோது
நான் கடலோடு போவேனோ
இல்லை கரை சேருவேனோ என்பது
கேள்விக்குறியாய் இருந்தபோது
என்னை சுற்றி நண்பர்கள்
குளம் போல இருந்தார்கள்
விடையேதும் தெரியாது
வினாவதுவும் புரியாது
வெற்றுதாளாய் இருக்கின்ற போது
என்னை சுற்றிய நண்பர்கள்
வற்றிய கிணறு போல் உள்ளார்கள்
இன்றோ நாளையோ என.........


கஸ்ரோ

Thursday, April 22, 2010

நண்பியே....

உன் சோக வரிகளில்
மூழ்கிவிட்ட நண்பர்களில்
நானும் ஒருவன் நண்பியே....
ஆனாலும் உனக்கு ஆறுதலாக
எதாவது சொல்வதற்கு
பூபாளம்களோ,
வசந்த கீதங்களோ
என்னிடம் இல்லை,,
என்னிடமும்
உன்னிடம் உள்ளது போல்
முகாரி மட்டும்தான் உள்ளது ......

அன்புடன் கஸ்ரோ

Thursday, April 15, 2010

சொத்தாக....

கண்ணுக்குள் கனவு இருந்தது..
அன்று நீ எனக்குள் இருந்தாய்
என் சொத்தாக....

கண்ணுக்குள் கானலாய் இருக்கிறாய்
இன்று நீ எனக்குள்ளேதான் இருக்கிறாய்
இடம் மாறிய சொத்தாக........

கஸ்ரோ

Saturday, March 27, 2010

தோழி & காதலி

ஒரு
தோழி காதலியாகும்போதும்
காதலி தோழியாகும்போதும்
இதயமும் இடைவெளியும் ..
இணைக்கப்படுகிறது வெகுவாய்!


ஆனால் ஒரு உண்மை
தோழிகளுக்கான இடைவெளியிலிருந்து
காதலிக்கான இடைவெளிகளை
பிரித்தெடுப்பது கடினம்

மீண்டும் நாளைக்கு......


கல்லூரி செல்லும் வேளை..


வேம்படி வீதியில் அன்னநடை

பழகும் என் சைக்கிள்- உன்பொருட்டு..

வருவாயோ வரமாட்டாயோ..?

கூடவே உன் தங்கை வருவாளா?

வயது போன நேரத்தில் கூட

காவல் பார்க்க உங்கப்பர் வருவாரா..?

பத்தாம் கிளாஸ் படிக்கும் போதும்

பத்தி இல்லா கேள்விகள்... பதிலளிக்க

பிரேம்குமார் மிஸ் ஆல் கூட முடியாது..

தலை குனிந்து வரும் என் தேவதை

தனியாய் நடந்து வருவதும் அழகுதான்..

பூவுக்குள் நாகம் போல ஆபத்தனதும்தான்

ஏனெனில் அப்பன் வருவான் பின்னால்

வேம்படிக்கு திரும்புகையில்....

புன்னகையுடன் கூடிய ஓரப்பார்வை

அது ஆயிரம் கதை கூறுமே.......

கல்லூரி முடியுமட்டும் இருப்பு கொள்ளாது

பாடங்களையும் சரிவர கவனிக்காது

மீண்டும் என் தேவதையின்

பின்னால் அன்னநடை

குறித்த வீதி வந்ததும்

மீண்டுமொரு ஓரப்பார்வை

போதும் எனக்கு.. அன்றைய பொழுதுக்கு..

மீண்டும் நாளைக்கு......

என்பயணம் அவள் பின்னால் தொடரும்...

மோசம் செய்ததும் சரிதானா?

வாசம் வீசும் நம் உறவுக்குள்


வேசமின்றி நாசவேலை செய்தது யார்?

பாசம் வைத்து சிலர் பழகி

மோசம் செய்ததும் சரிதானா?

மறைவு எதுவும் எமக்கில்லை என்று

இறுமாந்திருந்த எனக்கு

உன்னால் கிடைத்த பதில் சரிதானா?

வாழ்வில் ஒரு தடவை.

நிகழும் மகிழ்வான நிகழ்வு பற்றி

எனக்கு சொல்ல மறந்ததும் சரிதானா?

உயிர்த்தோழன் என்று உரக்க

நான் கூறியது வலுவிழந்து போனதே....

நம்மை பிரிக்க பலர் நினைத்த போது

பிழறாமல் நின்றவனே- இன்று

தொலைதூரத்தில் நான் இருக்க

மனு ஏதும் கொடுக்காமல்

பிரிவெளுதியது நியாயம் தானா?

கண்களில் கண்ணீர் அருவியென பாய

வெண்ணிலவின் ஒளியும் மங்கி போக

கோபம் தணித்து உனை எதிர்பார்த்து

சோகத்தோடு காத்திருக்கின்றேன்





கஸ்ரோ

என்றும் அழிக்கப்போவதில்லை...............

நீ வர மாட்டாய் என்று தெரிந்தும்,

எனக்கான உன் இதயம்

இடம் மாறிசென்றது தெளிவாக தெரிந்தும்....

இதயத்தில் எழுதிய உன்னை

என்றும் அழிக்கப்போவதில்லை...............

நட்புகள்


ஆண்டுகள் சில சென்றால்

அன்பான முகங்கள் மறக்குமோ....

நாடு விட்டு நாடு சென்றால்

நட்புகள் தான் பிரிவெழுதுமோ....

நம்பிக்கையின் அஸ்திவாரங்கள்-இன்று

ஆட்டம் காணுமோ.......?

நான் செய்த பிழை எதுவோ....

எனக்கெதுவும் புரியலையே...!!!


கஸ்ரோ

உன் மனசில்,,..................

காதல் எனும் வான வெளி

மப்பும் மந்தாரமுமாய் இருந்து

வசந்தம் கொண்டாடிய கணங்களில்

கையில் ஒரு குட்டி பொம்மையுடன்

மனதில் என்னையும் கொண்டு உறங்கினாய்

காதல் எனும் வானவெளி

வரட்சியில் வாடி வதங்கிய போது

அருகில் மூன்று உயிர் பொம்மைகளுடன்

நீ ஆனந்தமாக உறங்குகின்றாய்.....

உன் மனசில்,,..................

நடந்தது நன்றாகவே நடந்தது......


படிப்பதிட்கு அவள் வேம்படி சென்றபோது
இடி இடித்தது என் உச்சந்தலையில்
வெட்டியாய் திரியும் காலிப்பயல்களை நினைத்து.....
வெண்சட்டை உடுத்தி அவள் சென்றபோது
ஆசைபட்டேன் அவள் கழுத்துபட்டியாக.......
தம்பர் மண்டபத்தில் இருந்து எட்டி பார்த்தபோது
தேவதையின் தரிசனம் கிடைக்காததால்
தம்மடிக்க தொடங்கினேன் தனிமையில்..
"பிக் மச்" இட்காவது வந்திருப்பாள் என்று
சற்றே எட்டி பார்த்த போது....
பத்திரிசியார் மைதானத்தில் அவளை...
கண்டதாக சிலர் கூறினார்,,,,,
உனை நினைத்த நேரத்தில்.............
உனக்காக களித்த பொழுதில்...........
எனக்காக எத்தனையோ கருமங்களை
ஆற்றியிருந்தால்...எதாவது நடந்திருக்கும்...
நல்லது........................
நடந்தது நன்றாகவே நடந்தது......

கஸ்ரோ...........

பார்த்தவுடன் முதல் பார்வையிலேயே பிடிக்கணும்

பார்த்தவுடன் முதல் பார்வையிலேயே பிடிக்கணும்
இதுதாண்டா உன் ஜோடின்னு மனசு சொல்லணும்
இதயத்தில் ஏறி உட்கார்ந்து எனை இம்சிக்கணும்
தூக்கம்கெட்டு அவள் நினைவுகள் எனை வறுதெடுக்கணும்
அவள் நினைவோடேயே மனசு அலையணும்
மறுபடி எப்போ பார்ப்பேன்னு எம்மனசு தவிக்கனும்
இந்த சின்ன ஆசைகள் எல்லாம் ஒரு பொழுது
கேள்விகளையும் பதில் அற்றவைகளாகவும் இருந்தன.....

முதற் பார்வையிலேயே பிடித்தது
உன் ஜோடின்னு மனசு சொன்னது
உன் நினைவுகள் எனை இம்சித்தன
அலை பாய்ந்த என் மனசு
உன்னை நினைத்து தினமும் ஏங்கியது
உன்னை பார்த்த பின்பு இவை எல்லாம் நிகழ்ந்தது

இனியவை

ஒரு சந்திப்பு...........

இனியவை, உங்கள் மனதிற்கு இனியவை நினைக்க நினைக்க இக்கணமும் இனிப்பவை, எண்ணும் போதெல்லாம் மனதில் ஒரு மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் உண்டு பண்ணுபவை எவை என்று கேட்டால் ஓராயிரம் காரணங்களை சுட்டிக்காட்டுவீர்கள் முதற் காதல் தொடக்கி முதலிரவு வரைக்கும் அசை போடுவீர்கள்... ஆனால் பிரிந்து சென்ற நண்பர்களின் தொடர்பு, உருவம் மாறுகின்ற வயதில் பிரிக்கப்பட்டு ஆள் அடையாளமே 100 வீதம் மாறி போயிருக்கின்ற ஒரு சூழ்நிலையில் 14 வருடங்கள் கழித்து அந்நிய மண் ஒன்றில் என்னை அடையாளம் கண்டு ஆரத்தழுவிய அந்த கணப்பொழுது என்னை கண்டு கொண்ட போது அவன் அடைந்த ஆனந்தம் என் வாழ்நாளில் மறக்க முடியாத தருணங்களை ஒன்றாகி விட்டது... ஆயிரத்து தொள்ளயிரத்து தொண்ணூற்று ஐந்து ஜப்பசி பிரிந்த நாங்கள் 2009 நவம்பர் இல் சந்தித்தோம் ... அந்த நண்பனின் பெயர் கோகிலன் ..........................
பூச்செண்டு கொண்டு வந்தேன்

பூந்தளிரே உனக்காக

பூரிப்புடன் வாங்கி வைத்து

புறமுதுகு காட்டி சென்றாயே...


மாலை கொண்டு வந்தேன்

மாங்கிளியே உனக்காக

மனமகிழ்ந்து சூடினாயே - இன்று

மலர் பாடை கட்டினாயே எனக்கு...


பால் பழமும் கொண்டு வந்தேன்

பசும் மானே உனக்காக

பாங்குடனே அருந்தி விட்டு

பாதை மாறி சென்றாயே.....


இன்னிசை கீதம் இசைத்து வந்தேன்

இசைகுயிலே உனக்காக இசை கேட்டு

இசையோடு வாழ்ந்து

இழவு காத்த கிளியக்கினாயே இன்று...


கஸ்ரோ

என்றார்கள்

கல்லுக்குள்ளே ஈரம் உண்டு என்றார்கள்

அது கசிவதும் கூட உண்டு என்றும் சொன்னார்கள்

கல்லை விட கடினமனத உன் மனசு

அதை எண்ணி கசிகிறதே என் இதய குருதி

காரிருள் கானகத்தில் கூட சிற்சில நேரம்

விட்டில்கள் நொடிப்பொழுது வெளிச்சம் தரும்

காதல் எனும் பறவை இருளுக்குள் போன போது

நம்பிக்கை சுடராய்எதுவுமில்லை எனக்கிங்கு....

கஸ்ரோ

உப்பின் சுவை

உப்பும் முத்தும் ஒரே வகையான ஒலிச்சுவை

கண்ணீர் துளி உப்பின் சுவையுடையதே.........

முத்தை அதன் சுவையை அறியாத நான்....

உப்பின் சுவையை தினமும் உணருகின்றேன்

ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு பீலிங்க்காம்
சொல்கிறார்கள் பலர்.... இல்லையே..............

எனக்கும் உனக்கும் ஒன்றாகத்தானே இருந்தது.....
சின்ன வயசில் காதல் பீலிங்க்ஸ் ..........
சேலத்து மாங்காய் என்றால் பீலிங்க்ஸ்......
இறால் கறி என்றால் இறக்கை கட்டும்........
வெண்டிக்காய் என்றால் தூர ஓடுவோம்
பீலிங்க்ஸ்பள்ளி செல்லும் நேரம் ஒன்று.....
பார்வைகள் பரிமாறும் கணங்கள் ஒன்று.....
காதல் தெரியாத வயசில் காதலித்த
பீலிங்க்ஸ்நம்பவில்லை நானும் அப்போ........
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு பீலிங்க்ஸ்....
என்ற பீலிங்க்ஸ் ஆனா வார்த்தையினை....
கடைசி பையன் பால் குடிக்கவில்லையே....
மூத்தவன் சொல் பேச்சு கேட்கிறான்
இல்லையேஐயோ...அவரை இன்னமும் காணவில்லையே.....
உன் பீலிங்க்ஸ்..தனிமை..தவிப்பு..இயலாமை.. என் பீலிங்க்ஸ்...
தோற்று போனது... என் பீலிங்க்ஸ் பற்றிய பீலிங்க்.......
கஸ்ரோ

காதலிக்காதீர்கள்......

காதலிக்காதீர்கள்......
அது வெற்று தாளில்
நீங்கள் கனவுடன் எழுதும்
உங்கள் கவிதை போல்
அழகாக இருக்காது.....................

கஸ்ரோ
ஏன் தலை குனிந்து நிற்கிறாய்?

என் அன்பே.....? வெட்கமா......?

ஓ.............................................................

என்னை மறந்து விடுங்கள்.....

என்று சொல்லி சென்ற

அந்த கணப்பொழுது அல்லவே இது...

கஸ்ரோ

வேதனை

வாடிப்போன
வேதனை பற்றி

மடிந்து போகும்
பூக்களிடம் கேட்காதீர்கள்...........

என் காதலிடம்
உரத்து கேளுங்கள்
மொட்டு நிலையிலிருந்தே
கூறும் வேதனையின்
சோகம் பற்றி......

கஸ்ரோ.

முதல்பார்வை .

உன் திருமணத்திற்கு பின்னான
உன் வாழ்விற்கும்
தனித்து விடப்பட்டதிட்கு
பின்னான
என் வாழ்விற்கும்
பல நிலைகள் உண்டு இப்போ...
நாம் இருவரும் காதலித்த போதும்
நான் இப்போதும் உன்னை
காதலிக்கின்ற போதும்
பல நிலைகள் உண்டு.....
ஆனாலும்
நிலையான ஒரு நிலை
நிரந்தரமாய் உள்ளது..
அது நிரந்தரமாய்
எப்போதும் இருக்கும்
அது எனை நோக்கிய
உந்தனது
முதல்பார்வை .......

கஸ்ரோ.....

என்னவளே

என்னவளே எனக்காக மணமாலை
வாங்கி வருவாய் என காத்திருந்தேன்
காலங்கள் கழிந்ததே தவிர
கன்னியுன்னை காணவில்லை...
வந்தாய் எனக்காக மாலையுடன்...
அது என் கல்லறைக்கே அர்ப்பனமகியது

கஸ்ரோ

மறக்க முடியுமா...? அந்த நாட்களை....

மறக்க முடியுமா...? அந்த நாட்களை....

மறக்க முடியுமா...? அந்த நாட்களை....
மத்தியத்து நண்பர்கள்.....
கல்வியினை தவிரஏனைய அனைத்தையும்
கற்க சென்ற நாட்கள்..
மத்திய தாயின் மடியில்
புரண்டு விளையாடிய அந்த நாட்கள்
பள்ளி ஆசிரியர்களிடம் படிக்க மறுத்து
பல பாடம் படித்த நாட்கள்..........
இப்போ நினைத்தால் கவலை வருகின்றது
அறிவற்ற நிலையில் ஆசிரியர்களுடன்
அடிதடிக்கு சென்ற நாட்கள்
இப்போ புரிகின்றது..
ஆசிரியர்கள் அடாவடி செய்தாலும்
அடங்கி போக வேண்டுமென்று
இப்போ நன்றாக புரிகின்றது..
வேம்படி பிள்ளைகளுக்கு பின்னால் சென்றது....
சுண்டிகுளிக்கு பின்னால் சுற்றி திரிந்தது...
நண்பனுக்கு உதவி..நட்பிற்கு உதவி... என்று...
நாய் மாதிரி.. நாலாபக்கமும் நடமாடியது...

மூலையில் இருந்த என்னை
முன்னிலைப் படித்தி விட்ட
பிரேம்குமார் மிஸ்.......
தட்டிகொடுத்து நிமிர வைத்த....
ஓங்கார மூர்த்தி சேர்..........
ஜெயக்குமார் சேர்......
நன்றாக இருப்பாய் என நன் மனதோடு(/??) வாழ்த்தும்
ஜெயசீலன் சேர்......
வம்பு வரதன்...
சகுனி சந்திரகுமார்....
மறக்கமுடியுமா???
மத்தியத்து நினைவுகளை.....

முனியப்பரில் களித்த பொழுதுகள்...
சண்டைகளுடன் கூடியே வாழ்ந்தாலும்
நட்புடன்வாழ்ந்த நிமிடங்கள்
போர்ஸ்டார் இற்காக போராடிய பொழுதுகள்
சாதனை கழகத்தில் இருந்த
சந்தோஷமான காலங்கள்மறக்க முடியுமா?
நண்பர்கள் தம்பிகள் என களித்தகனாக் காலங்கள்....
பிரதாப் கமி கீதா கர்சன் சுகந்தன் சுசந்தன்
மகிந்தன் கிறிஸ்டி கிச்சான் கிரி சிவா
வெடி ஜெயதாஸ் மயூ ரீகன் அரவிந்தன்
அபிசேகன் மற்றும் பலர் மறக்க முடியுமா...?
கஸ்ரோ
வீணையிடம் உறவாட

விரல்களுக்குதனே உரிமை...

விளக்குடன் உறவாட

விட்டில்களுக்கு தானே உரிமை......

உன் விழிகளை காட்டி

எனை விட்டில் ஆக்கியது ஏன்?


கஸ்ரோ

யார் மனசில யாரு?

யார் மனசில யாரு?

என் மனசுல நீ

உன் மனசுல நான்

எம் இருவரின் மனசிலும்

நம் எதிகாலம்--அது அப்போ....

இப்போ உன் மனசில

உன் கணவன்,பிள்ளைகள்.

நீயும் என் காதலும்...

என் மனசில் இப்போதும்.....

நிரந்தரமாய்.........

கஸ்ரோ

மோசமான நிமிடம்..

உலகத்திலேயே மிக மோசமான விடயம்

நமக்கு பிடித்தவர்கள் நம்மை விட்டு

பிரிந்து செல்வதுதான்..........

அதிலும் நாம் காதலித்த பெண்

"நீ வேணாம் என்னை மறந்திடு"

என்று சொல்வாங்களே அதுதான்

மிக மிக மோசமான நிமிடம்...

எனக்கொரு கல்லறை வேண்டும்


எனக்கொரு கல்லறை வேண்டும்

யாரவது அமைத்து தாருங்கள்

வேதனைகளை தாங்கிய பொழுதுகள்

சோதனைகளை கொண்ட வாழ்க்கை

தோல்விகள் அனுபவித்த கணங்கள்

ஏமாற்றங்களாய் அமைந்த நிமிடங்கள்

துரோகங்களையே சந்தித்த என் மனது

வந்த வேகத்தில் திரும்பிய உறவுகள்

காற்றாகி போன பாசாங்கு வார்த்தைகள்

வெறுமையாகி போன எனது காதல்

கண்ணீராய் போன எனது கடந்த காலங்கள்

இவைகள் எல்லாம் புதைக்கப்படவேண்டும்

எனவே எனக்கொரு கல்லறை வேண்டும்.....

யாராவது அமைத்து தாருங்கள்.............

கஸ்ரோ

எப்படி இது நியாயம் அன்பே.........?

காதல் எனும் மைதானத்தில்

களிப்புடன் விளையாடவே கனவு கண்டேன்

நானும் நீயுமே வீரர்களாய் இங்கு

நடுவர் ஏதும் நமக்கில்லை எங்கும்

தவறாய் ஆட்டத்தை ஆடியதும் நீதான்...

தடுத்து நிறுத்தி போதும் என்ற என்னை

உதைத்து வீழ்த்தியதும் நீதான்...

அன்பே..................

சிவப்பு அட்டை காட்டியதும் நீதான்

எப்படி இது நியாயம் .................??

மேன்முறையீட்டு மனுவும் செய்தேன்

நீதியின்றி உன்னால் நிராகரிக்கவும் பட்டேன்

நடுவர் பார்வையாளர் அற்ற மைதானத்தில்

மூன்றாம் நடுவரையும் நீதான்...

எப்படி இது நியாயம் அன்பே.........?

கஸ்ரோ

நலமாக இருக்கின்றாயா...

நலமாக இருக்கின்றாயா...
இருப்பாய் என்றே நினைக்கின்றேன்
நலமாக நீ வாழ்வதற்கு
எந்தன் வாழ்த்தும் உனை சேரட்டும்
மனை மாறி சென்ற உனை
மனதால் நினைப்பதும் கூட
தவறு என்று தெரிந்த போதும்
என் மனதை கட்டுப்படுத்த
என்னால் முடியவில்லையே ...
கடந்து செல்லும் ஒவ்வோர் கணமும்
உன் நினைவுகளை
சுமந்தே செல்கின்றன
சுமையாக அல்ல சுகமாக.......

CASTRO

வேதனைகளும் வலிகளும் வாழ்க்கையில் இருக்க வேண்டுமே தவிர அவைகளே வாழ்க்கையாக அமைய கூடாது

CASTRO