கல்லூரி நேரங்களில் கூட
கற்பதை பற்றி கண நேரம் கூட
கவலை கொண்டதில்லை
ஏனெனில் என் மனதில்
அப்போதும் உன் நினைவுகளே
நிரம்பி இருந்தன.....
ஆனால்
பாடசாலை பொழுதுகள்
தோல்விகளுடன் கடந்து செல்ல
வாழ்க்கை பயம் வந்தது....
வேலை தேடும் வேலையை விடுத்து...
காதல் செய்யும் நேரங்களே அதிகமாக
வெட்டியாய் கடந்தது சில பொழுதுகள்
இதயத்தில் வாழும்
உன்னையே நினைத்து
பொழுதுகளை நகர்த்தியதால்
உயரங்கள் என்பன
உயர்ந்து போயின.....
ஆனால்,
பணத்தால் உயர்ந்து
பாஸ் போர்ட்டிலும் மாறுபட்டு
கனவானொருவனை கைபிடிக்கும்
எண்ணத்துடன் அழைத்த போதுதான்
காலமெல்லாம் உன்னோடு
வாழும் கனவுகள் கலங்கிய நிலையில்
கண் விழித்து பார்க்கையில்....
காலம் என்னை
கைகழுவி
கடந்து சென்றிருந்தது.
ஆயினும்
பயனின்றி கடந்து சென்ற
காலத்தை கைப்பற்ற
நண்பனின் ஆசியுடனும்
என்னில் உள்ள நம்பிக்கையுடனும்
உறுதியாக ஊர் நாடி
நகர்ந்து கொண்டிருக்கின்றேன்...
என்ன்றாவது ஒரு நாள்
நாம் சந்திப்போம் - அப்போது
உனக்கு சொல்வேன் நன்றி பல....
என் பலத்தை
என் மனவுறுதியை
எனக்கு நீ
புரிய வைத்தமைக்காக......
அன்புடன்
கஸ்ரோ
No comments:
Post a Comment