Saturday, February 12, 2011

படித்ததி பிடித்தது.........

வானம் அழுகின்றது உன் பார்வையின்றி
நான் நினைக்காத போது
என் கண்கள் உன்னைப்பார்த்தது
காதலை பிரிக்க ஆயிரம் துரோகிகள்...
என் காதலுக்கு நீயே துரோகி!
அதே காதலுடன் என்னிதயம் மரணம்!

அன்பால் பிறந்த நம் காதல் வாழ
உன் கண்கள் இரண்டும் போதும்
நான் காதல் கொண்ட விழிகள்
அடி நீரில் மறைந்திருந்து
யோலிக்கும் வைரம் போல்

மலர்ந்து மணம் வீசும் றோஜா போல்
உன் இதழ் பிறந்த கதை
அந்த இதழ் மட்டும் என் வாழ்வின் வலி
சிக்கிப்போன உன் பார்வையில்
கம்பியால் பின்னப்பட்டிருக்கும் உன் மௌனம்
வலி கொண்ட இதயம் தேடுதே தன் விழியை!!!

அகத்தின் ஆழமான கருத்துகளை
ஒரு சிரிப்பின் மூலம் மறைத்து விடலாம்.....

நண்பர்களுக்கு

என் இனிய நண்பர்களுக்கு நம் சந்திப்பும் எப்போதாவது
நிகழும்
என வேண்டிக் கொள்ளுங்கள்
நம்பிக்கையோடு நாட்களை
நகர்த்துங்கள்
காற்றாவது சுமந்து
வரும் என் முகவரியை

எவருக்கு புரியும்....

இடையினில் விழுந்த விரிசல்
கடலினால் அதிகமாக.....
வேதனையில் துடித்த மனம்
தனிமையில் தவிக்க..
கூடி வாழ்ந்த நெஞ்சங்கள்
தொலை தூரத்தில் இருக்க
இருந்து இல்லாமலாய்
இதயத்தின் வேதனை
எவருக்கு புரியும்....
துடித்த இதயம்
நிசப்தங்கள் துயின்றிட
நெடிய இரவு
நீண்டே போகின்றது....

கஸ்ரோ