Saturday, March 27, 2010

மீண்டும் நாளைக்கு......


கல்லூரி செல்லும் வேளை..


வேம்படி வீதியில் அன்னநடை

பழகும் என் சைக்கிள்- உன்பொருட்டு..

வருவாயோ வரமாட்டாயோ..?

கூடவே உன் தங்கை வருவாளா?

வயது போன நேரத்தில் கூட

காவல் பார்க்க உங்கப்பர் வருவாரா..?

பத்தாம் கிளாஸ் படிக்கும் போதும்

பத்தி இல்லா கேள்விகள்... பதிலளிக்க

பிரேம்குமார் மிஸ் ஆல் கூட முடியாது..

தலை குனிந்து வரும் என் தேவதை

தனியாய் நடந்து வருவதும் அழகுதான்..

பூவுக்குள் நாகம் போல ஆபத்தனதும்தான்

ஏனெனில் அப்பன் வருவான் பின்னால்

வேம்படிக்கு திரும்புகையில்....

புன்னகையுடன் கூடிய ஓரப்பார்வை

அது ஆயிரம் கதை கூறுமே.......

கல்லூரி முடியுமட்டும் இருப்பு கொள்ளாது

பாடங்களையும் சரிவர கவனிக்காது

மீண்டும் என் தேவதையின்

பின்னால் அன்னநடை

குறித்த வீதி வந்ததும்

மீண்டுமொரு ஓரப்பார்வை

போதும் எனக்கு.. அன்றைய பொழுதுக்கு..

மீண்டும் நாளைக்கு......

என்பயணம் அவள் பின்னால் தொடரும்...

No comments:

Post a Comment