Wednesday, June 30, 2010

ஏனெனில் நான் இன்னமும் உன்னை நேசிக்கறேன்

விதி செய்த விளையாட்டே
நீ எனக்கு கிடைக்கவில்லை -என்று
நினைத்து அமைதியானேன் அன்று....

இது விதியின் விளையாட்டு அல்ல
எனக்கு நீ அளித்த பரிசு -என்று
தெரிந்து கொண்ட போது
அமைதியாய் உன்னை நினைத்து
உறங்கி கொண்டிருந்த என் இதயம்
சுக்கு நூறாகி போனது.....

காதலில் தோற்று விட்டேன்
என்ற கவலையை விட
தோற்கடிக்கபட்டேன் என்பதுதான்
இன்னமும் வலிக்கிறது

ஏமாற்றி விட்டாய் நீ என்று
இது வரை கவலை கொண்டதில்லை
ஏமாந்து போனேனோ என்று
இன்று சிந்திக்க வைத்து விட்டாய்

பிரச்சினை என்று சொன்னாய்
பிரிந்து விடுவோம் என்றும்
தொலைபேசியில் அழைத்து
அன்புடன் சொன்னாய்
உன் நலமே என்றும் நான்
நாடி வந்த படியால்
நகர்ந்து சென்றேன் உன் தடம் மாறி....

உன் புலம்பெயர்
சந்தோஷ வாழ்விற்கு
பிரச்சினை நானேதான் என்று
இன்றுதானே புரிந்து கொண்டேன்..என் அன்பே....

கோபம் வரவில்லை கண்ணே,
கோலம் ஏன் போட்டாய் நீயும்??
விளக்கி சொன்னால் விலத்தி விடுவேன் தானே
ஒன்பது வருட காதலில்
என்னை புரிந்து கொண்டது இவ்வளவுதானா??


அதனால் கூறுகிறேன்
இனியாவது உண்மையாய்
உன் கணவனிடமும்
பிள்ளைகளிடமும்.....

ஏனெனில்
உன்னை எவரும் தப்பாக
பேசிவிடக்கூடாது

ஏனெனில் நான் இன்னமும்
உன்னை நேசிக்கறேன்

மாற்றான் தோட்டத்து
மல்லிகையாய் உள்ளாய்
என்ற போதும் உன்னை மறக்க
ஏன் மனம் தயாராக இல்லையே.....


கஸ்ரோ

No comments:

Post a Comment