Thursday, June 24, 2010

தினம் தினம்
பல பேருடன்
பல விடயங்களை பற்றி
கதைக்கிறேன்
உன் வார்த்தைகளுக்கு
மட்டும்
அர்த்தம் தேடுவது
ஏன்???



விரும்புகிறேன் என்றவளின்
காதலை ஏற்கத் மறுத்த
இதயம்
காதலை சொல்லத் தயங்கிய
உனை நினைந்து
உருகியது எதற்காக??

காதலித்த பொழுதுகளை
உன் பேச்சுகளை மட்டுமே
செவிமடுத்து
மௌனமாக இருந்த
என் உதடுகள்
உன் பிரிவில்
கதறியழ துடிக்குதே
ஏன்???

பிரிவென்ற சொல்லுக்கு
பன்முறை செவிசாய்த்தருந்தும்
உன் பிரிவில் மட்டும்
விழிகளுக்குள் வியர்வை
ஏன்???

கஸ்ரோ

No comments:

Post a Comment