Monday, July 19, 2010

வலிக்காத நெஞ்சமதில் உன்னை மறக்காத நினைவுகளுடன்

மலர்ந்த காதல் மரணம் அடையுமா.?
இருவர் பிரிவு என்பது காதலுக்கு கல்லறை அமைக்குமா....?
காதலர்களுக்கு மரணம் சகஜமே...
காதலுக்கு மரணம் சாத்தியமாகுமா..??



காதல் இனிமையானது காதல் தேவதையே
இனிமையாக தானே இருந்தாய் நேற்று வரை...
வரமாக இருந்தது உன் நினைவு....-இன்று
துயரமாகி பாரமாய் என்னுள் உன் நினைவு.....


தனிமையாகி போன காதலால்
என் கவிதையும் தனிமையாகி போனதே....
அன்பே உன்னால் முடமாக்கபட்டு...
நொந்து போன என் காதலும்....
சந்தோசம் பாடையேறி போனது போன்ற
என் பேனாவின் வார்த்தைகளும்
என் மரண படுக்கையில் மகிழ்ச்சியுடன்...
நிறைவேறுமா......?


வாழ்க்கை முழுவதும் தனியாக
வாழ்ந்திட முடிவதும் இல்லை.....
உன் முதற்காதல் நினைவுகள் இன்றி
நான் வாழ போவதுமில்லை....
மல்லிகை செடியொன்று
என் நந்தவனம் வந்தாலும்...
மலர் பல தந்து மணம் வீசி நின்றாலும்....
தனிமை என்கின்ற என் தனி பொழுதுகளில்
நெருடுகின்ற முள்ளாய் நீயிருப்பாய்
என்பது நிட்சயமே.....


வலிக்காத நெஞ்சமதில் உன்னை மறக்காத நினைவுகளுடன்
இவன் கஸ்ரோ

No comments:

Post a Comment