Tuesday, April 27, 2010

நண்பர்கள்

நான் நலமாக இருந்தேன்
நன்றாக வாழ்ந்தேன்
என்னை சுற்றி நண்பர்கள்
ஆழ் கடல் போல் இருந்தார்கள்
கடல் தாண்டி சென்றபோது
நான் கடலோடு போவேனோ
இல்லை கரை சேருவேனோ என்பது
கேள்விக்குறியாய் இருந்தபோது
என்னை சுற்றி நண்பர்கள்
குளம் போல இருந்தார்கள்
விடையேதும் தெரியாது
வினாவதுவும் புரியாது
வெற்றுதாளாய் இருக்கின்ற போது
என்னை சுற்றிய நண்பர்கள்
வற்றிய கிணறு போல் உள்ளார்கள்
இன்றோ நாளையோ என.........


கஸ்ரோ

1 comment:

  1. அழகான வரிகள்.
    change the comment verification setting.

    ReplyDelete